வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Friday, July 30, 2010

சீனா - Last Part (4)

சீனா-4
சீனா Part - 1
சீனா Part - 2
சீனா Part - 3


சீனா, இந்தியா இரண்டு நாடுகளும் “BRIC” நாடுகள். போன இரண்டு பதிவுகளிலும் விஜய்காந்த் மாதிரி ஒரே புள்ளி விவராமா சொல்லி மண்ட காய வெச்ச... இப்ப என்னடான்னா “செங்கல் கருங்கல் அப்படீன்னு புதுசா கதை விடற என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது:) இந்த “BRIC” வேற. BRIC- என்பது Brazil, Russia, India, China என்பதின் சுருக்கம். அதாவது இந்த நான்கு நாடுகள்தான் உலகில் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகள். குறிப்பாக சீனாவும் இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் என்பதால் அடுத்த சில ஆண்டுகளில் உலகின் வல்லரசாக வருவதற்கான சாத்தியங்கள் உள்ள நாடுகள். என்னைப் பொருத்தவரை இப்போதே சீனா வல்லரசு தன்மையை அடைந்து விட்டது என்றுதான் கூறுவேன். இந்தியா வளர்ந்து வருகிறது.... ஆனால் சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்......

“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் ஒரு நடுநிலையான பார்வையில்
சீனா vs. இந்தியா 
[பதிவு எழுத வந்தவுடன் பள்ளியில் படித்த கால கட்டத்தில் பட்டி மண்றத்தில் பேசும்போது நடுவருக்கு ஐஸ் வைப்பதற்கான் சொன்ன திருக்குறள் எல்லாம் இப்ப ஞாபகம் வருது...............:)))].

1. தலைமை

சீனாவின் இந்த அசுர வளர்ச்சிக்குக் முக்கிய காரணம் கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரே கட்சி ஆட்சி முறை. தொலை நோக்கு திட்டத்துடன் செயல்படும் உறுதியான தலைவர்கள்.

இந்தியா அதற்கு எதிர் மறை. ஜனநாயகம் என்ற முறையில் மாறி மாறி வரும் ஆட்சியமைப்புகள். தொலை நோக்கு பார்வை இல்லா திட்டங்கள். பெரும்பாலான திட்டங்கள் ad hoc measures only!.  உறுதியான தலைமை கிடையாது.

2. கருத்து சுதந்திரம்

முன்பே கூறியபடி சீனா கம்யூனிசம் என்ற இரும்புக்கரம் கொண்டு மக்களை ஆண்டு வருகிறது. மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாது.

ஜனநாயக நாடான இந்தியாவில் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம்.... போராட்டம் நடத்தலாம். வலைப்பதிவுகளில் அரசியல் தலைவர்களை திட்டி எழுதலாம்:) ரொம்ப ஓவரா எழுதி பதிவர் சவுக்குக்கு நேர்ந்த நிலைமை அல்லது ஆட்டோ வந்தால் கம்பெனி பொறுப்பில்லை:)

3. கட்டமைப்பு

சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற நாட்டின் கட்டமைப்பில் சீனா வளர்ச்சியடைந்த நாடுகள் அளவிற்கு முன்னேறி விட்டது.

இந்தியா கட்டமைப்பில் சீனாவைவிட பல ஆண்டுகள் பின் தங்கியுள்ளது. வர்த்தக தலைநகரங்களான ஷங்காய், மும்பையை ஒப்பிட்டு பார்க்கும் போது மும்பை ஷங்காய் கிட்ட கொஞ்சம் கூட நெருங்க முடியாது.

4. ஊழல், லஞ்சம்

அரசாஙக அலுவலங்களில் ஊழல், லஞ்சம் என்பது சீனா, இந்தியாவிற்கு பொதுவான பிரச்சனை. ஆனால் சீனாவில் லஞ்சம் ஓரளவு acceptable level-ல் உள்ளது எனலாம். ஏனென்றால் ஒரளவுக்கு மேல் லஞ்சம் வாங்கி பிடிபட்டால் எவவளவு பெரிய தலைவர், அதிகாரி ஆனாலும் சிறைத்தண்ட்னை அல்லது மரண தண்டனை உறுதி. கீழ்க்கண்ட இந்த செய்தி ஒரு சமீபத்திய உதாரணம்:


 ஆனால் இந்தியா....  50 ஆயிரம் கோடிக்கும் மேல் 2ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த தொலைத்தொடர்பு மந்திரியின் ஊழல் நிருபிக்க பட்டாலும் அவர் இன்றும் மந்திரியாக தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றுவார்.

ஊழலை கண்டு பிடிக்கும் I.A.S அதிகாரிக்கு கிடைக்கும் பரிசு சஸ்பென்சன்.

நமது பாராளுமனறத்தை தாக்கிய தீவிரவாதிகள், மும்பையை தாக்கிய தீவிரவாதி ஆகியோர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றாமல் கோடிக்கண்க்கில் செலவு செய்து பாதுகாப்பு கொடுப்போம்!

5. நீதி, சட்டம் ஒழுங்கு

சீனாவில் கம்யூனிச ஆட்சியின் கீழ் நீதி, சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எந்த ஊரிலும் ரவுடியிசம், தாதாயிசம் கிடையாது. குற்றம் நிருபிக்கபட்டால் உடனே சிறைதண்டனை அல்லது பெரிய குற்றமென்றால் மரண தண்டனை. பாலில் Melamine” கலந்து விற்ற குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைத்த பரிசு மரண தண்டனை. இந்த செய்திகளை படித்து பாருங்கள்.



அதனால் சீனாவில் பெரிய குற்றங்கள் செய்வதற்கு பயம் இருக்கின்றது.

இந்தியாவில் நீதி, சட்டம், ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா என்பது கேள்விக்குறி? எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, ரவுடியிசம்! ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் சொரணையே இல்லாமல் சிரித்துக்கொண்டு நீதிமன்ற வாசலில் போஸ் கொடுக்கிறார்கள். அப்படியே தப்பித்தவறி குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைப்பதற்கு ஒரு பத்து இருபது ஆண்டுகள் ஆகி விடும். அதற்குள் வயசாகி இறந்து விடுபவர்கள் அதிகம். இந்த நிலையில் எப்படி குற்றவாளிகள் பயப்படுவார்கள்?

6. சுகாதாரம்

உலகிலேயே கழிப்பறை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாத நாடு இந்தியாதான். வெட்கம் இல்லாமல் நாம் தெருவில் சிறுநீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவோம். நம்மைவிட ஏழை நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கூட நான் தெருவில் சிறுநீர் கழிக்கும் மனிதர்களை எனது பயணங்களில் பார்த்தது கிடையாது. சாக்கடை, அசுத்தம் இவற்றின் மத்தியில் இந்தியாவில் வாழ பழகிவிட்டோம்.

நம்மைவிட மக்கள் தொகை அதிகமான சீனாவில் மக்கள் சுத்தம், சுகாதாரத்துடன் வாழ்கிறார்கள். நான் ஷங்காய், பீஜிங் நகரங்களில் சிறுநீர் நாற்றத்தை அனுபவிக்க வில்லை. தெருவில் சிறுநீர் கழிக்கும் சீனரையும் பார்க்க்க வில்லை

7. ஆங்கிலம்

ஆங்கில அறிவு மற்றும் புலமையில் இந்தியாவை சீனாவால் எக்காலத்திலும் மிஞ்ச முடியாது. காரணம் ஆங்கிலேயே ஆட்சியினால் நமக்கு கிடைத்த நண்மை! அமெரிக்காவில் பல தொழில்நுட்ப கம்பெனிகளில் உள்ள Engineering, R&amp போன்ற துறைகளில் Director, Vice-President போன்ற பெரிய பதவிகளில் இந்தியர்கள் அதிமாக இருப்பார்கள். காரணம் நமது ஆங்கில அறிவு. சீனர்கள் பெரும்பாலும் பொர்றியாளர்களாகத்தான் (Engineer) இருப்பார்கள்.

8. S/W vs. H/W

இந்தியா மென்பொருள் துறையில் சிறந்து விளங்குகிறது

சீனா பொருள்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

9. பொருளாதாரம்

சீனா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்

இந்தியா உலகின் பதினொன்றாவது பெரிய பொருளாதாரம்

10. வளர்ச்சி

பீகார், உத்தராஞ்சல் மற்றும் சில கிழக்கு பகுதி மாநிலங்களைத்தவிர இந்தியாவின் வளர்ச்சி நாடு முழுவதுமான ஒரே சீராண வளர்ச்சி.

சீனாவின் வளர்ச்சி நாடு முழுவதுமான ஒரே சீராண வளர்ச்சியல்ல. சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிதான் அபாராமாக வளர்ந்துள்ளது

அரசியல்வியாதிகளையும் மீறி இந்தியா தற்போது உலக அரங்கில் வெற்றி நடை போட்டு முன்னேறி வருவதற்கு காரணம் நமது தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி (IT and Information Technology) மற்றும் இந்தியர்களின் ஆங்கில அறிவு. நமக்கு நல்ல தொலைநோக்குள்ள சிங்கப்பூரின் லீ குயான் யூ (Lee Kuan Yew) போன்ற தலைவர்கள் கிடைத்தால்........

சீனா சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் ஜப்பானின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்றுக் கொண்ட பாடங்களின் மூலம் அது போன்ற தவறுகளை செய்யாமல் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய சக்தி மிகுந்த நாடாக விளங்கும் என்பது உறுதி! 

                      -- நிறைவு--
சீனா படங்கள்:
                                Great Wall-2010
                         Great Wall - 1997
                       Forbidden City - Emperor Palace
                           Summer Palace Lake
                           Dragon Building 

20 comments:

ஜோ/Joe said...

ரவி அண்ணா,
அங்கங்கே நகைச்சுவை நல்லா வந்திருக்கு.

வழக்கம் போல அருமையான தகவல்கள் . தொடர் நிறைவுற்றது தான் கொஞ்சம் வருத்தம் ..உங்களோட சீனப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி எழுதுங்களேன்.

வின்சென்ட். said...

ஒரு நல்ல தொடரை அறிந்த ஒரு மனநிறைவு. வாழ்த்துக்கள்.

“உலகிலேயே கழிப்பறை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாத நாடு இந்தியாதான். வெட்கம் இல்லாமல் நாம் தெருவில் சிறுநீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவோம்.”

இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுச்சுழல் கேடும் சவாலும் இதுதான்.தேசப் பிதா சபர்மதி ஆசிரமத்தில் கழிவை உரமாக்கும் முறையை கடைபிடித்தார். ஆனால் அவை மறைந்து இந்த நவீன கழிப்பறைகள் வந்து உரம் கிடைப்பதை தவிர்த்து நிலத்தடி நீரையும் பாழாக்கிவிட்டது என்னவோ உண்மை. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் இந்த முறையை சமீபத்தில் 255 பக்க புத்தகம் ( Humanure Handbook: A Guide to Composting Human Manure ) எழுதி 3 வது பதிப்பு ஆகியுள்ளது மற்றும் 5 மொழிகளிலும் மொழி பெயர்க்கபட்டுள்ளது. அதனை புகழ் பெற்ற Time இதழ் வெளியிட்டுள்ளது.

Time இதழ்
http://www.time.com/time/nation/article/0,8599,1945764,00.html

சபர்மதி ஆசிரமம்
http://timesofindia.indiatimes.com/articleshow/3482707.cms

அறிவிலி said...

ஒரு நல்ல எண்ணம் கொண்ட சர்வாதிகாரியின் ஆட்சிதான் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதே என் எண்ணமும்.

பனித்துளி சங்கர் said...

நானும் உங்களுடன் பயணித்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது தங்களின் பதிவு . புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி

hayyram said...

சீனாவை அறிந்து கொள்ள உதவுகிறீர்கள். நன்றி.

anbudan.
ram
www.hayyram.blogspot.com

Unknown said...

இருநூறு வருடம் முன்பு டாய்லெட் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் மேலை நாட்டு மக்கள் பெருமளவில் டாய்லெட் பயன்படுத்தத் தொடங்கினர். அதற்கு முன்னர் உலக மக்கள் எல்லோரும் எங்கே தங்கள் இயற்கை உபாதையை தீர்த்துக் கொண்டார்கள்? தேம்ஸ் நதி நூறு வருடம் முன் கூவத்தினை விட பல மடங்கு மோசமாக இருந்தது. தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் தான் ஆண்களும் பெண்களும் ஆய் இருப்பது வழக்கம். தேம்ஸ் நதியில் இருந்து வரும் ஆய் துர்நாற்றம் தாங்க முடியாமல், இங்கிலாந்து சட்டசபை மூடப்பட்டிருந்த நிகழ்வுகள் எல்லாம் தெரியும் தானே!

வெளி நாடு சென்று வந்தவுடன் நம் நாடு நாற்றமாக தெரிவது தவிர்க்க முடியாதது தான். இருப்பினும் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் இருந்த நம் முன்னோர்கள் எப்படிப்பட்ட வறுமையான சூழ்நிலையில் இருந்தார்கள், எங்கிருந்து நாம் எங்கு வந்திருக்கிறோம் என்பதனையும் நினைவு கூற வேண்டும்.

Unknown said...

சொர்க்கமே இருந்தாலும் சுதந்திரம் இன்றி அது என்ன பயன்.

சீனா, இந்தியாவை விட மூன்று மடங்கு அதிக பரப்பளவு கொண்டது. இருப்பினும் அதன் மக்கள் தொகை இந்தியாவை அடுத்தே உள்ளது. சீனாவின் "ஒரு குழந்தை" கொள்கையால் பறிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையை பற்றி நீங்கள் எழுதவில்லை. நமது இரண்டாவது குழந்தை வேண்டுமா அல்லது நாலு கோடி சொத்து வேண்டுமா என்று எல்லோரும் நமக்கு நாமே கேட்டு பார்ப்போம். சொத்தும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் அதற்கு பதில் வறுமையோடு என் பிள்ளைகள் கிராமத்து பள்ளியில் கூட படிக்கட்டும் என்று எந்த பெற்றோரும் கூற மாட்டாரா?

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்

தேவன் மாயம் said...

தொடந்து எழுதுங்கள் ரவி!!

Ravichandran Somu said...

ஜோ -- நன்றி.

சீனாவின் வளர்ச்சி, பொருளாதாரம் பார்வையில் எழுதியது இது. எனது பயண அனுபவங்கள், பார்த்த இடங்கள் போன்றவற்றை ”பயணங்கள்” என்ற தொடரில் பிறகு எழுதலாம் என்ற எண்ணம்.

வின்சென்ட் -- தங்களின் கருத்துக்கும், தகவல்களுக்கும் நன்றி

அறிவிலி -- சரியாக சொன்னீர்கள் அறிவிலி அண்ணே!

பனித்துளி சங்கர் -- நன்றி

Hayram -- நன்றி

Ravichandran Somu said...

Ashok --

இருநூறு வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்ததைப்போலவா நாம் இன்றும் வாழ்கிறோம். நம்மிடம் உள்ள குறைகளை நம்மால் முடிந்த அளவிற்கு சரிபடுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு சப்பை கட்டு காரணங்கள் சொல்லிக்கொண்டிருக்க கூடாது.

எல்லா நாடுகளிலும் நிறை, குறைகள் உண்டு. நான் ஒரு நடுநிலையான பார்வையில் கூறியிருக்கிறேன்.

Ravichandran Somu said...

சந்ரு - நன்றி

தேவன் மாயம் -- நன்றி டாக்டர்! முடிந்த அளவு தொடர்ந்து எழுதுவேன்!

மங்குனி அமைச்சர் said...

இந்தியா அதற்கு எதிர் மறை. ஜனநாயகம் என்ற முறையில் மாறி மாறி வரும் ஆட்சியமைப்புகள். தொலை நோக்கு பார்வை இல்லா திட்டங்கள். பெரும்பாலான திட்டங்கள் ad hoc measures only!. உறுதியான தலைமை கிடையாது. /////

அவனும் ஒன்னும் செய்ய மாட்டான் , அடுத்தவன் செய்தா அதையும் கேடுத்திடுவாணுக

Unknown said...

தங்கள் கட்டுரைக்கு மிகவும் நன்றி. இந்தியாவை யாராவது குறை சொன்னா நான் கொஞ்சம் டென்ஷன் ஆயிருவேன். அதனால் தான் கொஞ்சம் உணர்ச்சியாக எழுதி விட்டேன். எனது கருத்துக்கு என்னை மன்னிக்கவும்.

1900 களில் இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது எப்படி இருந்தது என்ற வரலாறு மீது ஆர்வம் இருந்தால் இங்கு படிக்கவும்.

http://india_resource.tripod.com/colonial.html

Ravichandran Somu said...

மங்குனி அமைச்சர் -- நன்றி

Ashok --

//எனது கருத்துக்கு என்னை மன்னிக்கவும்.//

மன்னிப்பு கேட்க தேவையில்லை. அவரவர் பார்வையில் கருத்துகள் வேறுபடும்... எனக்கும் இந்தியாவைப் பற்றி அவதூறுகாக பேசினால் கோபம் வரும்!

முதலில் சீனாவையும், இந்தியாவையும் ஒப்பிட்டு எழுதும் எண்ணம் இல்லை. நண்பர்கள் சிலர் கேட்டுக்கொண்டதால் எழுதினேன். ஒரு நடுநிலையான பார்வையில் எழுதியது இது. அதனால்தான் “சமன்செய்து” என்ற அந்த திருக்குறள்:)

பா.ராஜாராம் said...

சந்தோசமாக இருக்கு ரவி.

அசோக்,

வீட்டை விட்டு தெருவிற்கு வந்தாக் கூட, வீட்டு நினைவுதான். ஊரை விட்ட வந்த பிறகு, வீட்டை நினைக்கிற போது தெருவும் வந்து போகாமல் இருக்காது.

நாட்டை விட்டு வந்த பிறகு, நாடு, ஊர், தெரு, எல்லாம் வரத்தத்தான் வரும், கண்டிப்பாக vice versaa- வாக. அதாவது வீடு முதலில் பிறகு படிப்படியாக.

இந்த உணர்வு எல்லோருக்குமே இருக்கும் மக்கா. இருக்கணும்.

ரவியோட comparison-னில், நிலத்தடி நீர் மாதிரி நாட்டுப் பற்றும் ஓடுவதாக உணர்கிறேன். அதாவது, healthy comparison என்பதாக. கொஞ்சம் முக்குளிச்சு எந்திரிங்களேன்..என்ன சொல்கிறார் அல்லது எதற்கு சொல்கிறார் என்பது புரியலாம். நாட்டுப் பற்றினால் practical-லில் இருந்து விலகலாகாது. சுய பரிசோதனையில், சுய இரக்கம் கொண்டால், அது சுய பரிசோதனையா என்ன?

முரசொலி மாறன்.V said...

வந்தே மாதரம்.நாட்டுப் பற்று சிறிதும் இல்லாத ரவிக்கு கண்டணங்கள். எங்க வூட்டு வாசபடியாண்ட வா! கறுப்பு கொடி காட்டுறேன். சிங்கார சென்னைக்கு வந்து பாத்தா தெரியும் சேதி! நம்ம சென்னை மா நரகாட்சி கட்டி வச்சிருக்க 'சிறு நீர் கழிப்பி"டத்தை பயன் படுத்தினா ,எவ்வளவு சூப்பர்ரா ரேட்டுக்கே
தண்ணி பாயுது!அவ்வளவு அறிவு நம்ம பொறியாளனுக்கு.அதுவும்,நாட்பட்ட ச்(அ)சுத்ததில் -வாசனையோட கழிக்கும் பெருமை இருக்கே! அட அட!! ரவிய நெனைச்சா கோவம் கோவமா வருது.எதையும் யாரிடமிருந்தும் கத்துக்கவும் கூடாது! தப்புன்னா லேசுல ஒத்துக்கவும் கூடாது!! புர்ன்சுதா??
ஆங்கிலம் ஒரு மொழி -இந்தியை,ஜப்பானிசைப் போல! அதை கத்து கொண்டு இருக்கும் சீனன் cut & Paste பண்ண வருவான் -மலிவாக. வந்தே ஏமாத்ரம்-தண்ணிதராம.

tsekar said...

Super.It gives me a clear picture about china

tsekar

அமுதா கிருஷ்ணா said...

சைனா பற்றி நான்கு தொடரும் இப்பதான் படித்து முடித்தேன். அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். நிறைய விஷயம் தெரிந்துக் கொள்ள முடிந்தது. நன்றி ரவி.

ஜோதிஜி said...

நான் விரும்பி படித்த தொடர். வெற்றியடைய வாழ்த்துகள் ரவி,