வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Monday, September 27, 2010

டில்லி விமான முனையம்-3

சென்ற வாரம் அலுவலக வேலை காரணமாக டில்லி சென்றிருந்தேன். கல்மாடி & கோ அடிக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கூத்துகளைப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகி போகிவிட்டேன். சரி... 70,000 ஆயிரம் கோடி பணத்தை ஏப்பம் விட்டு இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் கப்பலேற்றியவற்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். Let’s look at one positive side… இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியினால் கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய நன்மை. டில்லியின் புதிய விமான முனையம்-3!

- 19-ம் தேதி இரவு டில்லி விமான முனையம் 3-ல் இறங்கி அதன் பிரமாண்டம், தரம், சுத்தம் ஆகியவற்றைப் பார்த்தவுடன் நான் சிங்கப்பூர் சாங்கி விமான முனையம் 3-ல் இருப்பது போன்று உணர்தேன்.

- இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட உலகத்தின் மூன்றாவது பெரிய விமான முனையம் (1-துபாய், 2-பீஜிங்). மிகக் குறைந்த காலத்தில் இந்த முனையம் கட்டி முடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் தனியார் நிறுவனமான GMAR தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு (Consortium).

- சிங்கப்பூர் சாங்கி விமான முனையம் 3-ல் இருப்பது போன்ற மிக உயரமான கூரையுடனான விசாலமான அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செக்கின் கவுண்டர்கள் உள்ளன.

- பணியாளர்கள் அடிக்கடி தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு டாய்லெட்டிலும் உடனடியாக சுத்தம் செய்வதற்கு ஒரு பணியாளர் உள்ளார்.

- குடிநுழைவு சோதனைக்கு நிறைய கவுண்டர்கள் இருக்கின்றன. அதிக நேரம் காக்கவில்லை.

- பாதுகாப்பு பரிசோதனைக்கு கொஞ்ச நேரம் (15 நிமிடங்கள்) காக்க வைத்து விட்டார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்தில் மட்டும் பாதுகாப்பு பரிசோதனை விமான கேட்டில் செய்வார்கள். அதனால சிங்கப்பூர் விமான முனையங்களில் உள்ளே செல்லும் வாயில்களில் கூட்டத்தை பார்க்க முடியாது.

- பாதுகாப்பு பரிசோதனை முடிந்து உள்ளே சென்றவுடன் விசாலமான அரங்கத்தில் பயணிகள் அமர்ந்து கொள்ள நல்ல இருக்கைகள், கடைகள், உணவு விடுதிகள் ஏராளம். நான்கு நாட்களாக வட இந்திய உணவுகளை சாப்பிட்டு காய்ந்து போயிருந்த நான் இட்லி.காம்-ல் அருமையான மாசால் தோசை சாப்பிட்டேன்:)

- தாகசாந்திக்காக Delhi Daredevils என்ற அட்டகாசமான பார் உள்ளது.

- 78 ஏரோ பிரிட்ச்கள் கொண்ட பெரிய முனையம் என்பதால் நல்ல நடை பயிற்சி செய்துதான் விமானத்தின் கேட்டை சென்றடைய வேண்டும்.

டில்லி விமான முனையம்-3 If there is a will, There is a way” என்பதற்கான எடுத்துக்காட்டு!

டில்லி காமன்வெல்த் போட்டி If there is a will to loot, there are many ways” என்பதற்கான எடுத்துக்காட்டு!

டில்லி விமான முனையம்-3 படங்கள்















22 comments:

துளசி கோபால் said...

அட! இவ்வளவு அருமையாவா இருக்கு!!!!!

ஜோதிஜி said...

இன்னும் தலைநகரில் கால் வைக்க நேரமே அமைய மாட்டேன் என்கிறது ரவி. உண்மைதான். ஒவ்வொரு இழப்பிலும் ஒரு வலி உண்டு என்பதைப் போல இந்த கொள்ளைக்கூட்டத்திடம் இருந்து ஒரு நல்லதும் இயல்பாகவே அமைந்து விடுகிறது அல்லது கிடைத்து வருகிறது.

படம் கைபேசியில் எடுத்ததா?

டீச்சர் போல அடுத்த ஒளி ஓவியர் கிடைத்து விட்டாச்சு.....

Unknown said...

நிறைய ஆச்சர்யமா இருக்கு, அப்புறம் சென்னை விமான நிலையத்தை ஆயிரம் கோடியில் மேம்படுத்துகிறார்கள். ஆனால் அது இன்னும் பத்து ஆண்டுகள் உபயோகத்துக்கு மட்டுமே, கிரீன் பீல்ட் வந்துவிட்டால், இதனை மூடி விடுவார்களாம்.. பின்பு எதற்கு பத்து ஆண்டுக்கு மட்டும் உபயோகப்படும் ஒரு இடத்துக்கு ஆயிரம் கோடி ....?

மரா said...

சந்தோஷமா இருக்கு.அல்லாரும் நெகடிவ்வாவே எழுதிக்கிட்டிருக்கும்போது
டெல்லில இருக்க நல்ல விசயத்த எழுதிட்டீங்க.புகைப்படங்களுக்கும் நன்றி.

naan said...

விளையாட்டு போட்டிகள் முடிந்தவுடன் இவர்கள் பராமரிப்பதை பார்த்தால் தெரிந்துவிடும் இவர்களின் :) :) :) :)

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேரிவிட்டன..............

ப.கந்தசாமி said...

தகவல்களுக்கு மிக்க நன்றி.

கோவி.கண்ணன் said...

ஆசிய நாடுகளின் அடையாளமாக, புத்தரின் பிறப்பு நாடு என்பதாக புத்தர் சிலையை வைத்திருப்பது சிறப்பாக இருக்கு.

ஜோதிஜி said...

புத்தர் சிலையை வைத்திருப்பது சிறப்பாக இருக்கு.

புத்தர் சிலை தான் இப்ப இலங்கையிலும் கண்ட இடங்களிலும் வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனா எங்கேயும் அவர் சொன்ன போதனைகளைத் தான் எங்கே வைக்கிறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க.

சரி தானே கண்ணன்.

Ravichandran Somu said...

துளசி கோபால்-- நான்கு வருடங்களுக்குப் பிறகு நம்ம குடில் பக்கம் வந்து கருத்து தெரிவித்தற்கு மிக்க நன்றி டீச்சர்!

ஜோதிஜி-- நன்றி. படங்கள் Cannon Camera-வில் எடுத்தது

கே.ஆர்.பி.செந்தில்-- புதிய கிரீன் பீல்ட் விமான நிலையம் கட்டி முடிக்க குறைந்தது 5 வருடங்கள் ஆகும். எனவே அடுத்த் 5 வருடங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய தற்போதைய விமான நிலையத்தை மேம்படுத்துவது தவிர்க்க இயலாத ஒன்று. தொலைநோக்கு பார்வையுடன் கீரின் பீல்ட் விமான கட்டுமான பணிகளை முன்பே ஆரம்பித்திருந்தால் இந்த ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியிருக்கலாம். It's sad that most of the projects in India are done in adhoc manner and not with a long term vision:(

Ravichandran Somu said...

மரா-- கருத்துக்கு நன்றி. ஆம்... நல்ல விசயங்களை பாரட்ட வேண்டும். எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்ககூடாது.

naan-- நல்லதையே நினைப்போம்:)

DrPKandaswamyPhD-- தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா!

கோவி.கண்ணன்-- நன்றி கோவியாரே.

Jackiesekar said...

எதோ இதையாவது செஞ்சு தொலைஞ்சாங்களே..

Jackiesekar said...

கிரின் பில்ட் வந்துச்சின்னா இது இண்டர் நேஷனல்கவும்.. இது நேஷனலாகவும் ஆக வாய்ப்பு இருக்கு... வள்ர்ந்து வரும் நாட்டில் இதுவே பிற்காலத்தில் பத்தது எனப்து என் கருத்து.. செந்தில்.

Ravichandran Somu said...

ஜாக்கி சேகர்-- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோக்கி.

vinthaimanithan said...

//பின்பு எதற்கு பத்து ஆண்டுக்கு மட்டும் உபயோகப்படும் ஒரு இடத்துக்கு ஆயிரம் கோடி ....? //
வீணாப்போனாலும் பரவால்ல மக்கின பொறவு கடல்ல கொட்டிடலாம்னு யோசிக்கிற அரசாங்க இதுக்கா கவலப்படப் போவுது?!

படம்லாம் அழகு சொட்டுதுங்க்ணா!

வடுவூர் குமார் said...

இதன் கட்டுமானம் L&T-ECC செய்திருப்பதாக அவர்கள் பத்திரிக்கையில் படித்தேன்.

ராஜ நடராஜன் said...

விமான முனையம் நல்லாயிருக்குதே!

நான் தலைப்பைச் சொன்னேன்.


கல்மாடி!கோபம் பொத்துகிட்டு வருது.எழுத்தில் காண்பித்து பழக்கமில்லாததால் இந்த ஆளை என்ன செய்றதுன்னு தெரியல.CWG யின் தவறுகளுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக சொல்கிறார்.பொறுப்பேற்றுக் கொள்வதுன்னா என்ன கல்மாடி?

தமிழ்போராளி said...

அறியாத எங்களுக்கு புகைப்படத்துடன் ஒரு கட்டுரை. வாழ்த்துக்கள் தோழரே

Hi-tech systems said...

i am reading your all posts its very nice keep writing

மனோ சாமிநாதன் said...

டெல்லி ஏர்போர்ட் மூன்றாம் முனையத்தைப் பார்க்கும்போதே மிகவும் மகிழ்வாக உள்ளது. புகைப்படங்கள் அருமை. தகவல்களுக்கும் நன்றி! கடந்த 36 வருடமாக அடிக்கடி விமானப்பயனங்கள் செய்பவள் நான். சென்னை ஏர்ப்போர்ட்-ஐப் பார்க்கையில் எப்போதும் வருத்தமாகவே இருக்கும் எப்போது இது உலக நாடுகளிடையே தரத்தில் உயரப்போகிறதென்று! சமீபத்தில் மும்பையில் உள் நாட்டு தளங்களைப் பார்த்தபோது நொந்து விட்டேன். டெல்லி ஏர்போர்ட் பற்றிய தகவல்கள் மனதிற்கு பெருமையையும் மகிழ்வையும் அளிக்கிறது!

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

sathishsangkavi.blogspot.com said...

தவறுகள் நடந்திருந்தாலும் உங்கள் பதிவின் படத்தைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இத்தனை அழகா@!