வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Saturday, September 11, 2010

*11*: உழவன்

கல்லூரியில் படிக்கும் போது (1987) நான் எழுதிய முதல் கவிதை!

                                                                        உழவன்


கரிய இருட்டின்
கொடுங்கோலாட்சியை ஒழிக்க
கதிரவன் புறப்படும் முன்பே
கலப்பையை
தோளில் சுமந்து சென்று...

கரிய இருளிடம்
போராடி வெற்றிபெற்ற 
இருமாப்பால்
கதிரவன் பவனிவரும்
பகல்பொழுது முழுவதும்
நெற்றி வியர்வை
நிலத்தில் விழ உழைத்து...

கரிய இருளிடம்
இரண்டாம் கட்டப் போரில்
தோல்வியைத் தழுவிய
கதிரவன் ஓடி மறைந்த பின்
வீடு திரும்பும் உழைப்பாளி!

                     *                   *               *

7 comments:

velji said...

கதிரவனை போராளியாக சித்தரித்திருப்பது நன்றாயிருக்கிறது!

கதிரவன் தோற்றாலும் உழைப்பாளி வெல்வான்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அண்ணே,

அப்பவே கவிதை எழுத தொடங்கிட்டியளா!?

உழவு - தொழில் மட்டுமல்ல சேவையும் கூட! -

ஜோதிஜி said...

நல்லாயிருக்கு.

முனியாண்டி பெ. said...

உழவன் வெல்வான் நல்ல இருந்தது

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Ravichandran Somu said...

velji-- நன்றி

அத்திவெட்டி ஜோதிபாரதி-- நன்றி ஜோதியாரே. அண்ணா பல்கலைக்கழகத்தில் எனக்கு சீனியரான பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களுடன் பட்டிமன்றத்திலும் கல்லூரி காலத்தில் மோதியிருக்கிறேன்:)

ஜொதிஜி-- நன்றி

முனியாண்டி - நன்றி

Ravichandran Somu said...

அனானி ஐயா--தாங்கள் எழுதியிருந்த வினவு மற்றும் ஆணாதிக்க பதிவரசியல் குறித்த தங்கள் கருத்தை நீக்கி விட்டேன். அதற்கான தளம் என்னுடைய வலைப்பதிவல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்!